1 ஜன., 2011

அனைவருக்கும் வணக்கம் ....

        தமிழில் பேச , எழுத வேண்டும் எனும் ஆர்வமும், எழும் சிந்தனைகளை எழுத வேண்டும் என எண்ணிய போது அடித்தளம் எனக்கு தந்தது வலைப்பூ .
                பல எண்ணங்களை கதைகளாக, கவிதையாக , கடந்த  ஆண்டு எனது 
covairamanathan.blogspot.com வலைப்பூவில்   எழுதி வருகிறேன். எனக்குத் தெரிந்த சமூக கொடூரங்கள் , எனது எண்ணத்தில் 
"தனிமனிதனின் குரலாக"  எழுத முயற்சி  செய்து வலைப்பூ ஒன்றை ஆரம்பிக்க பல மாதங்கள் முன்பு முடிவு பண்ண 'அதெல்லாம் எதற்கு' என்றே வேண்டாம் என இருந்தேன். மேலும் தனியாக வலைப்பூ வைத்து எழுதும் அளவுக்கு எல்லாம் சமூக சிந்தனையும் இல்லை, பின்னர் எனது சமூக எண்ணங்களையும், எழுத்துக்களையெல்லாம் 
தெரியப்படுத்தும்  தனி ஒருவனின் குரலாக இதை  பயன்படுத்தலாம் என்றே வலைப்பூ ஆரம்பிக்கிறேன் . 
      சென்ற வலைப்பூவில் எனது எழுத்தை  வெளியிட்டுவிட்டு அதற்குரிய விமர்சனங்களையெல்லாம் பார்த்துப் பழகிய பின்னர் இப்போதுதான் உண்மையான எழுத்துலகம் எப்படியிருக்கும் என்பது தெரிய முடிந்தது.
            எனது  எண்ணங்களை வெளியிட உதவியாக இருக்கும் இந்த வலைப்பூவில் இடப்படும் இடுகைகளுக்குக் கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகமாகவும் இருக்கக் கூடும், எவரின் கவனத்திலும் வராமலும் போகக் கூடும்.

சேராத இடந்தனில் சேர வேண்டாம்
போகாத இடந்தனில் போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

        என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு இந்த வலைப்பூவில் சுதந்திரமாக எவரது பார்வையிலும் தவறுதலாக பட்டுவிடாமல் தொடர்ந்து பயணிக்கிறேன்.


தங்கள் ஆதரவுடன்

மிகவும் நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக